மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

13.09.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 191

தலைப்பு !
“ எண்ணம் “
எண்ணம் என்னும்
என்றன் தோட்டம்
வண்ண மலர்கள்
வளர்ந்து செழிக்குதே //

மண்ணின் பெருமை
மலர்ந்து நின்றதோ
திண்ணம் கொண்டே
தீர்வாய் நகைக்குதோ //

நிலமும் விதையும்
நகமும் சதையுமாய்
வளமும் கொண்டிட
படரும் கொடியென //

சொல்லிலும் செயலிலும்
சிலர்உருவம் தெரியுதே
நல்வினை தீவினை
நாலுபேரைக் கொல்லுதே

உள்ளொன்றும் புறமொன்றும்
உள்ளங்கள் உளறுதே
வெள்ளி நகைப்புடனே
வினைகளை விதைக்குதே //

நாவென்னும் ஆயுதம்
நாற்புரமும் தாக்குதே
வாவென்ற உறவுகளும்
வாசலோடு நிற்குதே
எண்ணமொரு குரங்கென
என்தாத்தா கூறுவார்
திண்ணமுடன் கிளையிலே
திடமாய் நின்றிடு. //

நன்றி அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading