வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயம்

கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும் பந்தம்
திருமண இணைவிலே புதியதாய் சொந்தம்

ஒருவர் குறையை
இன்னொருவர் அறிவார்
ஒருவர் அருமையை இன்னொருவர் புரிவார்
மாற்றம் கண்டாலும் அன்பினை பொழிவார்
போற்றும் வாழ்வினை பூமியில் கழிப்பார்

எது வந்தாலும் பிரியாது பந்தம்
முதுமை வரை கூடவரும் சொந்தம்
தாழ்விலும் இவர்கள் மகிழ்ச்சியின் இனம்
வாழ்வே ஆகிவிடும் ஒரு பூங்காவனம்

இன்பத்தின் இராகம் இதயங்களால் மீட்டும்
அன்பினை ஒருவர் இன்னொருவர்க்கு ஊட்டும்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட இறைவனின் இந்நிகழ்வு
அர்த்தமுள்ள சடடங்கிதனால் உறவுகளுள் மகிழ்வு

ஜெயம்
02 -02 – 2026

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading