அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது
உணர்வுகளை கடந்த
அறிவின் நிலை அது
வெளிப்புற நிகழ்வுகளால்
உருவாகாது
உள்ளார்ந்த தெளிவால்
பிறக்கிறது

அமைதியின் முகவடிவமே இது
இதை தெரிந்தவன்
முதிர்ந்த மனிதன்
தன்னை காத்துக் கொள்பவன்
இதை கொள்வான்
மனிதனை
உள்ளார்ந்து சிதையாமல்
காப்பது இது

இது மனிதனின் மாபெரும் ஆற்றல்
வாழ்க்கையை
ஏற்றுக்கொண்டவனின்
தீர்மானம்
தன் மனநிலை தன்வசம் கொண்டவனே இதை செய்வான்
இது ஒரு புரிதலின் சின்னம்
வாழ்க்கையிடம்
மனிதன் சொல்லும்
மௌனமான சம்மதம்

நம்பிக்கையற்ற தருணத்திலும்
வாழ்வை விடாத
உயிரின் பிடிவாதம்
இதை தெரிந்தவன் என்பதே
அவன் துன்பத்தை
ஆளத் தெரிந்தவன்
என்பதற்கான சாட்சி

ஜெயம்
05-02-2026

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading