” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வானிலை நிபுணருக்கு வாழ்த்து

சக்தி சிறினிசங்கர்
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம்
அறிவியல் ஆர்வலர்
உலகினை
ஆள்பவர் அவரது சேவையில்
குறியது இருந்திடும் குறிப்புகள்
குறித்திடக் குவலயம் கேட்டிடும்
நெறிமுறை சொல்பவர் நிமிடமும்
நேரமும் சரியென உரைப்பவர்
செறிந்திடும் கல்வியும் ஞானமும்
சேர்ந்துதான் செப்புவர் வானிலை !
வானிலை மாறுதல் அறிந்தவர்
வாக்கினில் உண்மையை உரைப்பவர்
வானிலை நிபுணராய் வாழ்பவர்
வாழ்வினில் சேவையைச் செய்பவர்
மானிடர் காவலர் ஆனவர்
மாபெரும் உதவியாய் இருப்பவர்
தேனினைச் சொரிந்திடும் தீந்தமிழ்
தென்றலாய் வருடி வாழ்த்துகள்!

இன்று வானிலை அறிவியல் நிபுணர்கள் தினம் என்றமையால் கவிதை பிறந்தது.
நன்றி வணக்கம்

Author: