பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இரா் விஜயகௌரி

தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி்

உயிர்க்கூடு சுமக்கும் ஏகாந்தம்
உயிர்வலி இழைக்கும் பிரிவின் வலி
பசி பிணி தொலைத்த பரிதவிப்பு
பார்க்கும் இடமெங்கும் தேடல்கள் தாம்

விடை காணா கேள்விக் கணைகள்
விழிக்குள் சுமக்கும் பந்தத்தின் இழை
எங்கு. ஏது எப்படி யாரால் என்றெல்லாம்
பின்னித்தொடுக்கும் போர்க்கணைகள்

இறக்கி வைக்க முடியாத பந்தம்
ஏதிலிகள் ஆகி விட்ட பெருநொடிகள்
பேதலிக்கும் நெஞ்சின் வலி தீர
கட்டி அழ முடியாத பெருஞ்சிறை

கனவுகளுக்குள் காத்துக்கனியும். நொடிகள்
விழித்தால்வேரறுந்த ஆலமர விழுதுகளாய்
எதனை வலியென்று பரிந்துரைக்க
அம்மா உன் ரணம்ஆற்றிடவொண்ணா துயர்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading