19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சிவதர்சனி
வியாழன் கவி 1678
தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி!
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் தாண்டி ஈராயிரமாய்
நாட்களை எண்ணியே கடக்க
எத்தனை கோடி வலி இங்கே!
இருப்புக்களை உறுதிப்படுத்தாது
உணர்வுகளைப் பொருட்படுத்தாது
உயிர் வலி உணராது இன்னும்
உறவுகளை அலைக்கழிக்க!
இன்னும் எத்தனை நாட்கள்
எத்தனை யுகங்கள் வேண்டுமோ
தேடியவரும் இல்லாது போக
தேடப்பட்டவரும் தொடர்கதையாக!
இதுவா வாழ்வியல் நீதி நெறி
இதுவா மானிட தர்மம்
எய்தவர் இருக்க அம்பை நோவதா
ஈட்டிகளாய் வலி தேக்கம் காண்பதா!
நீர் வற்றிய விழிகளும்
குருதி வழிந்தே உலர்ந்த இதயமும்
காய்த்துப்போன பாதங்களும்
விதியானதோ எம் உறவுகளுக்கு!
இன்றே செய் அதை நன்றே செய்
இன்னும் தண்டிப்புகள் வேண்டாம்
ஆதரவாய் எம் கரமும் நீளும்
உறவுகளுக்காய் உணர்வோடு
நீதி கேட்போம்!!
நன்றி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...