03
Sep
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
03
Sep
நன்றியாய் என்றுமே
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
...
ரஜனி அன்ரன்
“ பேசாமல் பேசும் உலகமொழி “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 22.09.2022
மனித குலத்தின் ஆதிமொழி
ஆதிமனிதனின் ஆட்சிமொழி
மொழிகளுக்கெல்லாம் வழி சமைத்தமொழி
கண்ணாலே காவியம் சொல்லி
கைவிரல் அபிநயத்தை கலைநயமாக்கி
பேசாமலே பேசும் உலகப் பொதுமொழி
சைகை மொழியெனும் மெளன மொழியே !
செவிப்புலன் அற்றோர்க்கு எல்லாம்
விழிப்புணர்வு கொடுத்த மொழி
இனமதம் கடந்த பொதுமொழியாகி
பல்லுலகும் பேதமின்றியே பேசும்மொழி
தொல்லுலகில் எழுபது மில்லியன் பேருக்கு
கைகொடுத்த நிசப்தமொழி
சைகை மொழியெனும் மெளனமொழியே !
எண்ணக் கருக்களை வெளிப்படுத்த
வண்ணத் தகவல்களைப் பரிமாறிட
அங்கங்களை அசைவாக்கி
அபிநயத்தால் புலப்படுமே சைகைமொழி
சைகை மொழியை நாமும் கற்று
கேட்க பேச முடியாதோர்க்கு வழிகாட்டி
வல்லமையோடு அவர்கள் வாழ
வாழ்வில் ஒளியேற்றுவோம் நாமும் !

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...