உயிரான உறவு

நகுலா சிவநாதன்
உயிரான உறவு

உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு நெடிதுயர்ந்து ஓங்கும் காதலிது

உள்ளத்து உணர்வுகளில் எழுந்த காதல்
வெள்ளமாய்ப் பெருகிய அந்தக்காதல்
பள்ளம் மேடு பார்க்காமல் ஓடியகாதல்
பாய்ந்து மனமோங்கிய பரிவானகாதலிது

மாலைக் காற்றின் மனதோரம் வந்தகாதல்
மனசு தொட்ட ஊமைக்காதல் இது
கள்ளமில்லா கருணை உடையவன் காதல்
கன்னித் தெய்வமே அம்மா உன்மேல் கொண்டகாதல்

நகுலா சிவநாதன் 1842

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading