பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மட்டுவில் மரகதம்

மொழி

பல் மொழி பேசவும்
கற்க கசடற கற்கவும்
இனியவை பல கூறி
ஆறி நோயிலிருந்து தேறுதலடையவும்
அவசியமே அவசியம்
மொழியில் அருமை

இனிமையான மொழி
இனிக்கும்
மெல்ல உள் மனதில்
நுழையும்
அனைத்தையும் கொண்டு வரும்
கனல் போல் கக்கும்
உணர்ச்சி குறிப்புடன்
உயிரற்ற கூட உயிர்க்கவும் வைக்கும்
பேசவும் வைக்கும்
எம் மொழியில்
பேசினாலும் புரியுமாம் பிரபஞ்சத்திற்கு

ஒரு கணம் பேச
முடியாமை ஏற்பட்டால்
அதன் விளைவாக
நீரிலே அழுகின்ற
ஆமை போல மாறுமே!
யாரறிவார் வேதனையை

பேச ஒரு மொழி
இருந்தால் போதும்
உலகத்தி்ல்
ஒவ்வொன்றும் ஒன்றோன்று
தொடர்பாடல் கொள்கிறது
உள்ளே உள்ளவற்றை
வெளிய கொண்டு வந்து
வருத்தம் இல்லாதவனாக
நிறுத்திவிடும்
பேச வேண்டும்
பேசிய அந்த மொழியாலே
மனமார பேசினாலே
நோய் விட்டு போய் விடுமாம் மூன்னோர் வாக்கு

உயிரான தாய்வழி
தமிழ்மொழி உயர்வாக வேண்டும்
உயிரோடு உயிராக
வாழையடி வாழையாக
உறவாடி மகிழ
இனிய மொழி
தாய் மொழி போல் எங்க உண்டு

இதயங்களிலிருந்து
கொண்டு வந்து
பிரபஞ்சம்
முழுவதும் பரப்பிட ஒன்று போதும்
காசு பணம் சொத்து நகை சம்பாதிக்க தேவையில்லை
பரப்ப
இனிய மொழி ஒன்று போதுமே
போதுமே!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading