” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மட்டுவில் மரகதம்

மொழி

பல் மொழி பேசவும்
கற்க கசடற கற்கவும்
இனியவை பல கூறி
ஆறி நோயிலிருந்து தேறுதலடையவும்
அவசியமே அவசியம்
மொழியில் அருமை

இனிமையான மொழி
இனிக்கும்
மெல்ல உள் மனதில்
நுழையும்
அனைத்தையும் கொண்டு வரும்
கனல் போல் கக்கும்
உணர்ச்சி குறிப்புடன்
உயிரற்ற கூட உயிர்க்கவும் வைக்கும்
பேசவும் வைக்கும்
எம் மொழியில்
பேசினாலும் புரியுமாம் பிரபஞ்சத்திற்கு

ஒரு கணம் பேச
முடியாமை ஏற்பட்டால்
அதன் விளைவாக
நீரிலே அழுகின்ற
ஆமை போல மாறுமே!
யாரறிவார் வேதனையை

பேச ஒரு மொழி
இருந்தால் போதும்
உலகத்தி்ல்
ஒவ்வொன்றும் ஒன்றோன்று
தொடர்பாடல் கொள்கிறது
உள்ளே உள்ளவற்றை
வெளிய கொண்டு வந்து
வருத்தம் இல்லாதவனாக
நிறுத்திவிடும்
பேச வேண்டும்
பேசிய அந்த மொழியாலே
மனமார பேசினாலே
நோய் விட்டு போய் விடுமாம் மூன்னோர் வாக்கு

உயிரான தாய்வழி
தமிழ்மொழி உயர்வாக வேண்டும்
உயிரோடு உயிராக
வாழையடி வாழையாக
உறவாடி மகிழ
இனிய மொழி
தாய் மொழி போல் எங்க உண்டு

இதயங்களிலிருந்து
கொண்டு வந்து
பிரபஞ்சம்
முழுவதும் பரப்பிட ஒன்று போதும்
காசு பணம் சொத்து நகை சம்பாதிக்க தேவையில்லை
பரப்ப
இனிய மொழி ஒன்று போதுமே
போதுமே!

Nada Mohan
Author: Nada Mohan