கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மட்டுவில் மரகதம்

மொழி

பல் மொழி பேசவும்
கற்க கசடற கற்கவும்
இனியவை பல கூறி
ஆறி நோயிலிருந்து தேறுதலடையவும்
அவசியமே அவசியம்
மொழியில் அருமை

இனிமையான மொழி
இனிக்கும்
மெல்ல உள் மனதில்
நுழையும்
அனைத்தையும் கொண்டு வரும்
கனல் போல் கக்கும்
உணர்ச்சி குறிப்புடன்
உயிரற்ற கூட உயிர்க்கவும் வைக்கும்
பேசவும் வைக்கும்
எம் மொழியில்
பேசினாலும் புரியுமாம் பிரபஞ்சத்திற்கு

ஒரு கணம் பேச
முடியாமை ஏற்பட்டால்
அதன் விளைவாக
நீரிலே அழுகின்ற
ஆமை போல மாறுமே!
யாரறிவார் வேதனையை

பேச ஒரு மொழி
இருந்தால் போதும்
உலகத்தி்ல்
ஒவ்வொன்றும் ஒன்றோன்று
தொடர்பாடல் கொள்கிறது
உள்ளே உள்ளவற்றை
வெளிய கொண்டு வந்து
வருத்தம் இல்லாதவனாக
நிறுத்திவிடும்
பேச வேண்டும்
பேசிய அந்த மொழியாலே
மனமார பேசினாலே
நோய் விட்டு போய் விடுமாம் மூன்னோர் வாக்கு

உயிரான தாய்வழி
தமிழ்மொழி உயர்வாக வேண்டும்
உயிரோடு உயிராக
வாழையடி வாழையாக
உறவாடி மகிழ
இனிய மொழி
தாய் மொழி போல் எங்க உண்டு

இதயங்களிலிருந்து
கொண்டு வந்து
பிரபஞ்சம்
முழுவதும் பரப்பிட ஒன்று போதும்
காசு பணம் சொத்து நகை சம்பாதிக்க தேவையில்லை
பரப்ப
இனிய மொழி ஒன்று போதுமே
போதுமே!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading