” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இரா.விஜயகௌரி

மொழியடி அதனை மொழியடி…………

மொழியடி மொழியடி என் பெண்ணே
தமிழ் மொழி தன்னால் அமிழ்தெழுது
தேனினுமினிய மொழி தொடுத்தாய்
தீண்டும் போதினில் எனையிழந்தேன்

கொவ்வை மொழிதனில் அழகிருக்கும்
குவிந்து மொழிகையில் உயிர் துடிக்கும்
பேசும் அழகினில் மயங்கி எழ-என்
பிறப்பின் பெரும் பயன் உணர்ந்து நின்றேன்

தேவதை மகளாய் நீ தெரிந்தாய்
தெள்ளமுதினையே. எனக்களித்தாய்
உறவின் அழகே. உன் மொழி உதிர்வின்
உயிரின் வேரதைத் தொட்டதடி

சின்னக்கண்மணி. மொழியடி நீ
முத்தமிழ் கலந்து முரசறைந்தாய்
அழியாத்திடத்தனை உணர்த்தி. வந்தாய்
அழகுச். செல்வம் எனை மறந்தேன்

Nada Mohan
Author: Nada Mohan