மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இரா.விஜயகௌரி

மொழியடி அதனை மொழியடி…………

மொழியடி மொழியடி என் பெண்ணே
தமிழ் மொழி தன்னால் அமிழ்தெழுது
தேனினுமினிய மொழி தொடுத்தாய்
தீண்டும் போதினில் எனையிழந்தேன்

கொவ்வை மொழிதனில் அழகிருக்கும்
குவிந்து மொழிகையில் உயிர் துடிக்கும்
பேசும் அழகினில் மயங்கி எழ-என்
பிறப்பின் பெரும் பயன் உணர்ந்து நின்றேன்

தேவதை மகளாய் நீ தெரிந்தாய்
தெள்ளமுதினையே. எனக்களித்தாய்
உறவின் அழகே. உன் மொழி உதிர்வின்
உயிரின் வேரதைத் தொட்டதடி

சின்னக்கண்மணி. மொழியடி நீ
முத்தமிழ் கலந்து முரசறைந்தாய்
அழியாத்திடத்தனை உணர்த்தி. வந்தாய்
அழகுச். செல்வம் எனை மறந்தேன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading