சிவா சிவதர்சன்

[ வாரம் 221 ]
“காணி”

காணி என்றலே கண்ணில்படுவது ஆதிக்கவெறிதான்
காணியொன்று அப்பாவாங்கியஞாபகம் தொடர்ந்து இழுபறிதான்
காணியின்விலை வீடுகட்டியசெலவு, வழக்குப்பேசி தொலைத்ததொகை
காணிவழக்கில் எதிரிவென்று செலவு பணமும் கட்டிய கையறு நிலை!

மொத்தச்செலவையும் சேர்த்துப்பார்! தெருவோரம் நல்ல
தண்ணீர் காணி வாங்கிவாழ்ந்திருப்போம்!
இது அம்மாவின் ஆற்றாமை இரங்கலுரை!
“உலகில் நிலமோ மூன்றிலொருபங்கு மீதி இரண்டு பங்கும் நீர்”
இது சிறுவயதில் புவியியல் ஆசிரியரின் பூகோள விளக்கவுரை!

துருவப்பனி மலையுருகி நீராகிக்கடல் நீர்மட்டம் உயர்கிறது
துருவும் கடலலைகள் மண்ணை அரித்து நிலத்தை விழுங்குகிறது
மொத்தமாய் ஒருநாள் நிலம் கடலடியில் மூழ்கப்போகிறது
இது புவியியல் ஆய்வுமையம் விடுத்த எச்சரிக்கையுரை

கண்ணெதிரேகடற்கோள்கள் சுனாமிகள்ஆயிரம் கரையோரகிராமங்களை காணாமல்ஆக்கின
அரசஇராணுவ ஆக்கிரமிப்புக்கள் பலஊர்களையே காவுகொண்டன
தோம்போடுஉறுதியும் உலாந்தாவின் வரைபடமும் கச்சேரிப்பதிவும் இறந்தபிள்ளைக்கு உயிர்கொடுக்குமா?
காணிகளின்றி உயிர்வாழமுடியாதநிலை உண்மையே?
காணி அபகரிப்பில் பொறுமையிழந்து செயற்படுதல் வீண் சக்தி விரயமே!
ஆனாலும் அயலோடு அன்பாய்பழகி இருப்பதைக்கொண்டு சிறப்பாய் வாழ முயல்வோம்
ஏனெனில் ஒருநாள்
காணிகள் யாவும் கடலடியில் மூழ்கலாம் எங்கள் கல்லறைகளிடையே கயல் மீன்கள் நீந்திவிளையாடலாம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading