சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்
113

பசுமை

பசுமை நிறைந்த நினைவுகள்
பாடி களித்த காலங்கள்
பழகிகளித்த உடன் பிறப்புக்கள்
பிரிந்து சென்றோம்

இயற்கை அன்னையவள்
இதமாய் பூமிக்கு
பசுமை ஆடையை போர்த்தி அழகு
பார்க்கின்றாள்

சாமத்தில் சாரல் மழை பெய்து
வெப்பத்தை தணிக்குது
வெண்கதிருக்கு பன்னீர் தெளிக்குது

வியர்வையில் நனைந்து
செங்குருதி சிந்திய விவசாயி
விதம் விதமாய்
விளைவிக்கும்
கோதுமை சோளம் பசுமையின் கோலம்

கண்ணுக்கு விருந்து
உடலுக்கு உணவு
மனதுக்கு மகிழ்வு!!

வனவளத்தை பாதுகாப்போம்
பசுமையை பேணுவோம்
பசுமை உலகை
ஆள்வோம்
வெப்பத்தை தணிக்க உழைப்போம்!!

நன்றி
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading