” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 220
தனிமை

நாமே அதை எடுத்துக்கொண்டால்
மிகவும் இனிமையாக இருக்கும்
நமக்கு மற்றவர்கள் கொடுத்தால்
இருக்கும் அது கசப்பாக

சிறந்த ஆசானாய் உற்ற நண்பனாய்
பல பாடங்களை கற்றுத் தரும்
நான் யார் என புரிய வைக்கும்
தன்மை உண்டு தனிமைக்கு

தனிமை என்னை கொல்கிறது
கொடுமை என புலம்புவோர்
தனிமையில் இனிமை காணப்பழகினால்
அதுவும் இன்பமான உலகமே

கருவறையின் அமைதியையும்
நிம்மதியையும் தருவது தனிமை
பல வெற்றிக்கு ஆணிவேராய்
படைப்புகள் தோன்றுமிடம் தனிமை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan