15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே…
வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே...
சசிச
மாசி
பனியை பொழியாது பணிசெய்ய வாராய்
இனியும் குளிர்வேண்டாம் வெப்பத்தை தாராய்
எங்கோ ஒளிந்த பறவைகளும் வெளியே வந்து
எங்க மாசியென பாடிடுதே சிந்து
மெல்லனவே இருளகற்றி ஓளிர்ந்துவிடும் மாதம்
உள்ளத்துள்ளே குதூகலம் வந்துவந்து மோதும்
மேகம்விட்டு ஆதவனும் எட்டிப்பார்க்கும் நேரம்
தேகம்விட்டு சோம்பலதும் விடைபெற்றே ஓடும்
இறந்த மாதம் சென்றது தந்தே
பிறக்கும் மாதமும் தாராதோ வந்தே
மாசில்லா மகிழ்ச்சியது வாழ்க்கையிலே நுழையும்
மாசிவர கட்டவிழ்த்து கவலைகளும் கலையும்
ஜெயம்
29-01-2023
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.