” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மாசி

பனியை பொழியாது பணிசெய்ய வாராய்
இனியும் குளிர்வேண்டாம் வெப்பத்தை தாராய்
எங்கோ ஒளிந்த பறவைகளும் வெளியே வந்து
எங்க மாசியென பாடிடுதே சிந்து

மெல்லனவே இருளகற்றி ஓளிர்ந்துவிடும் மாதம்
உள்ளத்துள்ளே குதூகலம் வந்துவந்து மோதும்
மேகம்விட்டு ஆதவனும் எட்டிப்பார்க்கும் நேரம்
தேகம்விட்டு சோம்பலதும் விடைபெற்றே ஓடும்

இறந்த மாதம் சென்றது தந்தே
பிறக்கும் மாதமும் தாராதோ வந்தே
மாசில்லா மகிழ்ச்சியது வாழ்க்கையிலே நுழையும்
மாசிவர கட்டவிழ்த்து கவலைகளும் கலையும்

ஜெயம்
29-01-2023

Nada Mohan
Author: Nada Mohan