க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 255

பகலவன்
இருளில் தேடுகின்றாயா
பகலை
பகலில் தேடுகின்றாயா
நிலவை
குளிரில் தேடுகின்றாயா
சுட்டை
சுட்டில் தேடுகின்றாயா
குளிரை
இருப்பதை விட்டு
இல்லாத்தை தேடுகின்றாயே
மனமே!
இல்லாத து கிடைத்துவிட்டால்
இழந்ததை தேடுகின்றாயே

ஒடும் வாழ்வில்
உந்தன் குறிக்கோள்
எதில்
வாழும் வாழ்வில்
வழிகளை தேடுவது
எதில்
காலைப் பகலவன்
போல்
களைந்து எழுவாய்
உன் கலக்கத்தில் இருந்து!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading