” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 255

பகலவன்
இருளில் தேடுகின்றாயா
பகலை
பகலில் தேடுகின்றாயா
நிலவை
குளிரில் தேடுகின்றாயா
சுட்டை
சுட்டில் தேடுகின்றாயா
குளிரை
இருப்பதை விட்டு
இல்லாத்தை தேடுகின்றாயே
மனமே!
இல்லாத து கிடைத்துவிட்டால்
இழந்ததை தேடுகின்றாயே

ஒடும் வாழ்வில்
உந்தன் குறிக்கோள்
எதில்
வாழும் வாழ்வில்
வழிகளை தேடுவது
எதில்
காலைப் பகலவன்
போல்
களைந்து எழுவாய்
உன் கலக்கத்தில் இருந்து!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan