20
Nov
ஆத்மராகங்கள்
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
பகலவன்
உலகம் ஒளிர
ஒருவன் நீயே!
உயிர்கள் வாழ
உறுதுணையும் நீயே!
உதிக்கும் உனையே
துதித்தே நிற்போம்
உழவரின் தோழனாய்
உனையே வைப்போம்.
பிணியின் மருந்தாய்
ஒளி தரும் கதிர்கள்
பனியின் படர்வை
உருக்கும் கதிர்கள்.
பகலவன் கதிர்மழை
புத்துணர்சி தருமே
பார்வைகள் துலங்கிட
பேரொளி வரமே!
இரவை நீக்கி
இன்பம் அளிப்பான்
இவனே உலகின்
இணையில்லா சொத்து.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.