” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பாலதேவகஜன்

பகலவன்

உலகம் ஒளிர
ஒருவன் நீயே!
உயிர்கள் வாழ
உறுதுணையும் நீயே!

உதிக்கும் உனையே
துதித்தே நிற்போம்
உழவரின் தோழனாய்
உனையே வைப்போம்.

பிணியின் மருந்தாய்
ஒளி தரும் கதிர்கள்
பனியின் படர்வை
உருக்கும் கதிர்கள்.

பகலவன் கதிர்மழை
புத்துணர்சி தருமே
பார்வைகள் துலங்கிட
பேரொளி வரமே!

இரவை நீக்கி
இன்பம் அளிப்பான்
இவனே உலகின்
இணையில்லா சொத்து.

Nada Mohan
Author: Nada Mohan