நிமிர்ந்தே நின்றுவிடு

நிமிர்ந்தே நின்றுவிடு

நல்ல காலமும் நாளை பிறக்கட்டும்
நலிந்தவர் இன்றியே வருசம் மலரட்டும்
வலிமை கொண்ட வல்லமையும் தோன்றட்டும்

தெளிவு கொண்டே சிந்தனையும் வளரட்டும்

அறத்தோடு அன்பும் அகிலத்தில் மேம்பட்டும்
ஆண்மீகப் பற்றும் இறையருளும் கூடட்டும்

இல்லங்கள் தோறும் இன்பங்கள் பரவட்டும்
இனிய உறவுகளும் இம்மானிலத்தில் துலங்கட்டும்

நாளைய உலகம் உந்தன் கைகளிலே

நல்லவராக நடப்பதும் நன்மையே பாராய்
வேளையும் இதுதான் விளங்கிட நகர்வாய்
வேடிக்கை இல்லை நீயும் உண்மையை உணர்வாய்

சாதிக்க வேண்டும் கல்வியை கற்றுமே
சஞ்சலம் நீங்கிடவே குரோதியே வருவாய்

நிமிர்ந்தே நின்றிடவே விளங்கிடுவாய் என்றும்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading