சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நிமிர்ந்தே நின்றுவிடு

நிமிர்ந்தே நின்றுவிடு

நல்ல காலமும் நாளை பிறக்கட்டும்
நலிந்தவர் இன்றியே வருசம் மலரட்டும்
வலிமை கொண்ட வல்லமையும் தோன்றட்டும்

தெளிவு கொண்டே சிந்தனையும் வளரட்டும்

அறத்தோடு அன்பும் அகிலத்தில் மேம்பட்டும்
ஆண்மீகப் பற்றும் இறையருளும் கூடட்டும்

இல்லங்கள் தோறும் இன்பங்கள் பரவட்டும்
இனிய உறவுகளும் இம்மானிலத்தில் துலங்கட்டும்

நாளைய உலகம் உந்தன் கைகளிலே

நல்லவராக நடப்பதும் நன்மையே பாராய்
வேளையும் இதுதான் விளங்கிட நகர்வாய்
வேடிக்கை இல்லை நீயும் உண்மையை உணர்வாய்

சாதிக்க வேண்டும் கல்வியை கற்றுமே
சஞ்சலம் நீங்கிடவே குரோதியே வருவாய்

நிமிர்ந்தே நின்றிடவே விளங்கிடுவாய் என்றும்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan