10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
நடிப்பு
*******
அன்பினைக் காட்டுவர்
அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு
உள்ளத்திலே கசப்பு
நாவிலே அன்பு
நழுவிடுமே பின்பு
முகத்திலே வெளிச்சம்
அகத்திலே இருள்
பகர்ந்திடும் பாசம்
கலைந்திடும் வேசம்
உடையிலே உத்தமர்
நடையிலே துரோகிகள்
கபடம் இல்லையென்பர்
கசடை நெஞ்சினில் புதைப்பர்
பேசுவது உண்மையென்பர்
பூசுவது பொய்மை முலாம்
பழிபாவம் சுமக்கிறோமென்பர்
குழியினுள் தள்ளவும் தயங்கார்
காதலைக் கண்ணில் வைப்பர்
கல்யாணம் என்றால்
மண்அள்ளிப் போடுவர்
பார்த்தால் பசு போன்றிருப்பர்
வார்த்தையில் வாலை ஆட்டுவர்
வாஞ்சை காட்டி நடிப்பர்
வஞ்சம் கொண்ட வக்கிரப்போக்கர்
உலகமோ இருட்டு
வலம்வரும் திருட்டு
முகங்களோ அதிகம்
நகர்ந்திட நாமும்
நடிக்கவே வேண்டும்
நல்லவர்க்கு நல்லவராய்க்
கெட்டவர்க்குக் கெட்டவராய்!
நன்றி வணக்கம்!

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...