” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
நடிப்பு
*******
அன்பினைக் காட்டுவர்
அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு
உள்ளத்திலே கசப்பு
நாவிலே அன்பு
நழுவிடுமே பின்பு
முகத்திலே வெளிச்சம்
அகத்திலே இருள்
பகர்ந்திடும் பாசம்
கலைந்திடும் வேசம்
உடையிலே உத்தமர்
நடையிலே துரோகிகள்
கபடம் இல்லையென்பர்
கசடை நெஞ்சினில் புதைப்பர்
பேசுவது உண்மையென்பர்
பூசுவது பொய்மை முலாம்
பழிபாவம் சுமக்கிறோமென்பர்
குழியினுள் தள்ளவும் தயங்கார்
காதலைக் கண்ணில் வைப்பர்
கல்யாணம் என்றால்
மண்அள்ளிப் போடுவர்
பார்த்தால் பசு போன்றிருப்பர்
வார்த்தையில் வாலை ஆட்டுவர்
வாஞ்சை காட்டி நடிப்பர்
வஞ்சம் கொண்ட வக்கிரப்போக்கர்
உலகமோ இருட்டு
வலம்வரும் திருட்டு
முகங்களோ அதிகம்
நகர்ந்திட நாமும்
நடிக்கவே வேண்டும்
நல்லவர்க்கு நல்லவராய்க்
கெட்டவர்க்குக் கெட்டவராய்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan