நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

பண்டிகை வந்தாலே

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரத்துக்காக..

கவி இலக்கம்-2052

பண்டிகை வந்தாலே..
காலங்கள் விரைந்தோடும்
காத்திருப்பு பலமாகும்
சோர்ந்திருந்த உளத்திலெல்லாம்
சோர்வகன்று சுறுசுறுப்பாகும்..

வீடு வாசல் சுத்தம் காணும்
விருந்துகளும் தடல் புடலாகும்
பலகாரச் சூடு மிகும்
பக்கத்துக்காரர் கூடும் காலமாகும்..

உறவுகளும் கூடிக்கொள்ளும்
உணர்வுகளும் பரவடமாகும்
உள்ளத்தில் உவகை பொங்கும்
உத்வேகம் கடலாய் ஆகும்

ஊரில் தானே இத்தனை ஆகும்
ஊர் விட்டே வந்தால் மாற்றமாகும்
பேருக்கும் மட்டும் வந்து போகும்
பெருமை என்ன கூறும் பாரும்..

வாட்சப்பில் வாழ்த்துக் குவியும்
வார்த்தை ஜாலம் பெருகித்தள்ளும்
பெருமை அளந்தே காலம் செல்லும்
பெறுமதி இல்லாப் பண்டிகை ஆகும்
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan