அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

பண்டிகை வந்தாலே

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரத்துக்காக..

கவி இலக்கம்-2052

பண்டிகை வந்தாலே..
காலங்கள் விரைந்தோடும்
காத்திருப்பு பலமாகும்
சோர்ந்திருந்த உளத்திலெல்லாம்
சோர்வகன்று சுறுசுறுப்பாகும்..

வீடு வாசல் சுத்தம் காணும்
விருந்துகளும் தடல் புடலாகும்
பலகாரச் சூடு மிகும்
பக்கத்துக்காரர் கூடும் காலமாகும்..

உறவுகளும் கூடிக்கொள்ளும்
உணர்வுகளும் பரவடமாகும்
உள்ளத்தில் உவகை பொங்கும்
உத்வேகம் கடலாய் ஆகும்

ஊரில் தானே இத்தனை ஆகும்
ஊர் விட்டே வந்தால் மாற்றமாகும்
பேருக்கும் மட்டும் வந்து போகும்
பெருமை என்ன கூறும் பாரும்..

வாட்சப்பில் வாழ்த்துக் குவியும்
வார்த்தை ஜாலம் பெருகித்தள்ளும்
பெருமை அளந்தே காலம் செல்லும்
பெறுமதி இல்லாப் பண்டிகை ஆகும்
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading