சிவரூபன் சர்வேஸ்வரி

சூரவதை
ஃஃஃஃஃஃஃ

சுழன்றடித்தது காற்று சுற்றி எரிந்தது தீபம் //
உழன்று கொண்டது மனங்கள் உருவமின்றிய காட்சி //
தளர்ந்து போனதகம் தடுமாறியது பலம் //
மலர்ந்து நின்றவுறவுகள் மடிந்துபோனதே மாயம் //
புலர்ந்து விட்டபோதிலும் வெண்புரவி ஓடவில்லை //
உலர்ந்துபோன எண்ணத்தில் ஊனம் சூழ்ந்தது பாராய் //

அசுரனையழித்து தேவரைக்காத்த வேலவன் எங்கே //
சூரவதை செய்யவும் அவன் மீண்டுவரவேண்டும் //
பாரச்சுமை கண்டே பாழும் நிலைவேண்டாம் //
வாழும் காலமதிலே வாகை சூடவேண்டும் //

வேலுமினிதே வேட்கையும் தணிவிப்பாய் தரணியிலே //
நாளுமுனை வேண்டினேன் காணுமின்பம் தருவாய் கந்தா //

சிவருபன் சர்வேஸ்வரி

🌞🌸🌺💐🌷✍✍✍✍✍

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading