Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

சாதனை வேண்டும்.

சாதனை வேண்டும்.
சிவருபன் சர்வேஸ்வரி

சாதனை வேண்டுமடி சாதிக்க வேண்டுமடி,
வேதனை வந்தாலும் வெற்றியும் வந்திடுமே
சோதனை என்றிருந்தால் சுதந்திரம் வந்திடாது,
பாரத்தை சுமந்துமிங்கே பாரினில் மிளிர்ந்துவிடு,
ஆயிரம் துன்பங்களும் ஆட்சியாய் வந்தபோதும்,
சாதிக்கப் பிறந்தவளே சரித்திரம் காண்பாயடி,
வல்லமை கொண்டாயடி வலிமையாய் நின்றாயடி,
கள்ளத்தனமில்லை கண்ணே காவியமகளானாய்,

வரமும் கிடைக்குமடி வஞ்சகம் இல்லையெனில்,
அருளும் கிடைக்குமடி ஆணவம் இல்லையெனில்,
புரட்சிகள் நடந்தபோதும் இலட்சியம் தோற்பதில்லை,

வறட்சியில் வாழ்ந்தபோதும் வாய்மையும் அழிவதில்லை,
அன்னை சரஸ்வதியும் அணைத்து நிற்கையிலே,

அன்பும் நிலைக்குமடி அறமும் வெல்லுமடி,

சிவருபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan