” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சாதனை வேண்டும்.

சாதனை வேண்டும்.
சிவருபன் சர்வேஸ்வரி

சாதனை வேண்டுமடி சாதிக்க வேண்டுமடி,
வேதனை வந்தாலும் வெற்றியும் வந்திடுமே
சோதனை என்றிருந்தால் சுதந்திரம் வந்திடாது,
பாரத்தை சுமந்துமிங்கே பாரினில் மிளிர்ந்துவிடு,
ஆயிரம் துன்பங்களும் ஆட்சியாய் வந்தபோதும்,
சாதிக்கப் பிறந்தவளே சரித்திரம் காண்பாயடி,
வல்லமை கொண்டாயடி வலிமையாய் நின்றாயடி,
கள்ளத்தனமில்லை கண்ணே காவியமகளானாய்,

வரமும் கிடைக்குமடி வஞ்சகம் இல்லையெனில்,
அருளும் கிடைக்குமடி ஆணவம் இல்லையெனில்,
புரட்சிகள் நடந்தபோதும் இலட்சியம் தோற்பதில்லை,

வறட்சியில் வாழ்ந்தபோதும் வாய்மையும் அழிவதில்லை,
அன்னை சரஸ்வதியும் அணைத்து நிற்கையிலே,

அன்பும் நிலைக்குமடி அறமும் வெல்லுமடி,

சிவருபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan