சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 296
விருப்பு தலைப்பு

இயற்கை அன்னையின்
ஈடில்லா வனப்பினை
கண்குளிர ரசித்திடும்
கவிதைநேரக் கானமிது

மோதிநிற்கும் எண்ணங்கள்
முகில்களாய் கலைந்தோட
வீசிவரும் தென்றலெம்மோடு
விளையாடும் பொழுதிதுவோ

பாய்ந்துவரும் நதியழகும்
பாடிவரும் பறவைகளும்
தேடித்தரும் இதமான
தேனினிமைப் பொழுதன்றோ

பச்சைநிறத் தோரணம்போல்
பாதையெம்க்கும் பச்சையாடை
பாய்ந்தோடும்.நதியெழுந்து
பரவிநிற்கும் வெள்ளைநீராய்

காளையிவன் கண்களிலே
காணுகின்ற காட்சிகள்
காட்டிநிற்கும் வனப்புகள்ஒ
காலமெல்லாம் கூடவரும்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading