கவிதை

இரா.விஜயகௌரி
மொழிக்குள் விதை விதைத்து
கருவுக்குள் உருவாகி கனிவாகி
கதையல்ல காவியமே இதுவென்று
தைத்த நொடி கவிதை பிறந்த கணம்

சிந்தைக்குள் விழுந்த கரு
சிதையாமல் மொழி இழைய
கன கச்சிதமாய் நெய்த இழை
முத்தெனவே முகிழ்ந்தசையும் கவிதை

செழுமைக்குள் செதுக்கி எழும்
மொழிமகளாள் அழகின் எழில்
நெஞ்சத்தில் புகுந்தெழுந்து வானவில்லாய்
விரிந்தசையும் பெருந்தெறிப்பே கவிதை

ஆம் ஆய்ந்தறிந்துமொழிவதல்ல
அகத்திலெழும் உணர்வசைய ஆங்கு
சிதறி விழும் செந்தமிழின் துகள்களெல்லாம்
காந்தமென கவர்ந்திழையும் பூஞ்சொரிவே கவிதை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading