” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கவிதை

இரா.விஜயகௌரி
மொழிக்குள் விதை விதைத்து
கருவுக்குள் உருவாகி கனிவாகி
கதையல்ல காவியமே இதுவென்று
தைத்த நொடி கவிதை பிறந்த கணம்

சிந்தைக்குள் விழுந்த கரு
சிதையாமல் மொழி இழைய
கன கச்சிதமாய் நெய்த இழை
முத்தெனவே முகிழ்ந்தசையும் கவிதை

செழுமைக்குள் செதுக்கி எழும்
மொழிமகளாள் அழகின் எழில்
நெஞ்சத்தில் புகுந்தெழுந்து வானவில்லாய்
விரிந்தசையும் பெருந்தெறிப்பே கவிதை

ஆம் ஆய்ந்தறிந்துமொழிவதல்ல
அகத்திலெழும் உணர்வசைய ஆங்கு
சிதறி விழும் செந்தமிழின் துகள்களெல்லாம்
காந்தமென கவர்ந்திழையும் பூஞ்சொரிவே கவிதை

Nada Mohan
Author: Nada Mohan