பசுமை

ராணி சம்பந்தர்

சோர்வின்றியே உழுது பயிரிட்டுப்
பார் போற்றிய பச்சைப் பசேலிலே
போர் ஊற்றிய அலங்கோலமது

பயிரிட்டுப் பூரித்த பிறந்த மண்ணோ
போட்ட நச்சுக் குண்டிலேயே எரிந்து
மேலும் மேலும் கருகிச் சாம்பலாகிடக்
காலமும் மாறிய இரும்புக் கோலமது

பெரும் பூகம்ப வெள்ளப் பெருக்கோடு
சூறாவளியும் ஊதி ,ஊதி மோதிடவே
காடும், நிலமும் எரிந்து இயற்கை மாறி
எழுந்த பரிதாபகரப் பாவக் கோலமது

செயற்கையோடு மூடிய மாசுத் துகளும்,
இயற்கைக் காற்றோடு கலந்த தூசியும்,
ஊற்றெடுத்த நச்சுக் கிருமியும் பயிரை
அழித்துப் பசுமை ஒழித்த ஊமைப்
பசிக்குத் தீனியான கோலமதுவே .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading