அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

பசுமை

ராணி சம்பந்தர்

சோர்வின்றியே உழுது பயிரிட்டுப்
பார் போற்றிய பச்சைப் பசேலிலே
போர் ஊற்றிய அலங்கோலமது

பயிரிட்டுப் பூரித்த பிறந்த மண்ணோ
போட்ட நச்சுக் குண்டிலேயே எரிந்து
மேலும் மேலும் கருகிச் சாம்பலாகிடக்
காலமும் மாறிய இரும்புக் கோலமது

பெரும் பூகம்ப வெள்ளப் பெருக்கோடு
சூறாவளியும் ஊதி ,ஊதி மோதிடவே
காடும், நிலமும் எரிந்து இயற்கை மாறி
எழுந்த பரிதாபகரப் பாவக் கோலமது

செயற்கையோடு மூடிய மாசுத் துகளும்,
இயற்கைக் காற்றோடு கலந்த தூசியும்,
ஊற்றெடுத்த நச்சுக் கிருமியும் பயிரை
அழித்துப் பசுமை ஒழித்த ஊமைப்
பசிக்குத் தீனியான கோலமதுவே .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading