அதிகாலை விடியல்..

சிவதர்சனி. இராகவன்
வியாழன் கவிதை..2157

அதிகாலை வேளையிலே..
அசதியான தூக்கம் கலைக்கும்
அழகான அதிகாலை வேளை
கண்விழிக்கச் சொல்லும்
குருவிகள் பாட்டொலி
பட்டுத்தெறிக்கும் நிலவொளி
பக்குவமாய் வீழும் பனித்துளி
வானம் கொள்ளும் துயரம்
மெல்ல இருள் சூடிக்கொள்ளும்
மின்மினியாய் விண்மீன்கள்
கண்ணடித்துக் காதலிக்கும்
பூக்கள் மலர ஆயத்தமாகும்
பூமி விடியலை அணைத்து நிற்கும்..
சிவதர்சனி இராகவன்
29/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading