களவு

ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால் குற்றம்
உழைத்தால் நேர்மையாக நிம்மதியும் பற்றும்

கொள்ளையடித்து சொத்தைச்சேர்த்து சொகுசாக வாழுங்கூட்டம்
சொல்லப்போனால் இதற்கொருநாள் கணக்கை காட்டவேண்டும்
எடுப்பவர் தொடர்ந்தும் எடுத்திட முடியாது
தட்டுப்பவர் வந்துவிட்டால் அநியாயம் தொடராது

நடிப்பது நல்லவனாய் எதுவரைக்கும் இங்கே
பிடிப்பட்டால் வாழ்க்கையே நாறிவிடும் அங்கே
களவுசெய்து வாழ்வோருக்கு கிடைத்துவிடும் நரகம்
உளச்சுத்தம் சொர்க்கத்தை படைத்துக்கொண்டே நகரும்

அற்பமான செய்கையிதால் அடைவெதெல்லாம் தீமை
கற்றுவிட்டு மறந்துவிடின் வாழ்வி லது மேன்மை
இழிவான இச்செயலை அகற்றுவதே நன்மை
வழியுண்டு தீவினையின்றி அவ்வாழ்வே உண்மை

26-07-2025

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading