” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

களவு

ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால் குற்றம்
உழைத்தால் நேர்மையாக நிம்மதியும் பற்றும்

கொள்ளையடித்து சொத்தைச்சேர்த்து சொகுசாக வாழுங்கூட்டம்
சொல்லப்போனால் இதற்கொருநாள் கணக்கை காட்டவேண்டும்
எடுப்பவர் தொடர்ந்தும் எடுத்திட முடியாது
தட்டுப்பவர் வந்துவிட்டால் அநியாயம் தொடராது

நடிப்பது நல்லவனாய் எதுவரைக்கும் இங்கே
பிடிப்பட்டால் வாழ்க்கையே நாறிவிடும் அங்கே
களவுசெய்து வாழ்வோருக்கு கிடைத்துவிடும் நரகம்
உளச்சுத்தம் சொர்க்கத்தை படைத்துக்கொண்டே நகரும்

அற்பமான செய்கையிதால் அடைவெதெல்லாம் தீமை
கற்றுவிட்டு மறந்துவிடின் வாழ்வி லது மேன்மை
இழிவான இச்செயலை அகற்றுவதே நன்மை
வழியுண்டு தீவினையின்றி அவ்வாழ்வே உண்மை

26-07-2025

Nada Mohan
Author: Nada Mohan