கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

உணர்வு

ஜெயம்

உள்ளத்தில் தினமும் எழுக்கின்ற அலை
சொல்லப்போனால் இது தூங்காத நிலை
பல நேரங்களில் உண்மையாகவே படைக்கும்
சில நேரங்களில் நம்மையே உடைக்கும்

சொல்லாத வார்த்தைகளை சொல்லச் சொல்லும்
செல்லாத பாதையிலும் செல்லச் சொல்லும்
எத்தனை கதவுகள் மனித மனதிற்கு
அத்தனைக்கும் ஒரே திறவுகோல் உணர்விங்கு

உளத்து ஓவியர் வடிவங்கள் வரையும்
தெளிவாயும், சில மங்கலாயும் தெரியும்
நம்மை தெரியவைக்கும் கண்ணாடியும் இதுவே
நம்மை மறைத்து மூடுவதும் அதுவே

நேரமும் இதை மட்டுப்படுத்த முயலாது
யாரும் அதை கட்டுப்படுத்த இயலாது

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading