நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஒற்றை ஒளிவிளக்கில்….

வசந்தா ஜெகதீசன்
ஒற்றை ஒளிவிளக்கில்…
கிழக்கில் கதிரவன் விடியல் வரம்
கிடைக்கும் தருணங்கள் ஆற்றல் தரும்
சுழலும் உலகே எமக்கு வரம்
இரவும் பகலும் தருமே பலம்
கார்த்திகைத் திங்கள் ஒளிக்கோலம்
காசினி எங்கும் நினைவு நிஜம்
மதிப்புறு வீரத்தின் விழிதிறப்பு
வாஞ்சையில் வாழ்ந்தோர் வரவேற்பு
காந்தள் மலரால் கெளரவிப்பு
உயிர்க்கொடை உறவின் அர்ப்பணத்தை
எமக்காய் தம்முயீர்ந்த தன்முனைப்பை
ஏற்றல் செய்யும் கார்த்திகையே
ஒற்றைத் திங்களில் ஓங்குபுகழ்
வீரத்தின் விடுதலை தாங்கும் எழில்
மறவாது போற்றும் மதிப்பே வரம்
அணையாத் தீபத்தின் அகிலப்பலம்
மறவாது வாழ்வோம் மாற்றம்நிஜம்நன்றி.

Author: