” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒற்றை ஒளிவிளக்கில்….

வசந்தா ஜெகதீசன்
ஒற்றை ஒளிவிளக்கில்…
கிழக்கில் கதிரவன் விடியல் வரம்
கிடைக்கும் தருணங்கள் ஆற்றல் தரும்
சுழலும் உலகே எமக்கு வரம்
இரவும் பகலும் தருமே பலம்
கார்த்திகைத் திங்கள் ஒளிக்கோலம்
காசினி எங்கும் நினைவு நிஜம்
மதிப்புறு வீரத்தின் விழிதிறப்பு
வாஞ்சையில் வாழ்ந்தோர் வரவேற்பு
காந்தள் மலரால் கெளரவிப்பு
உயிர்க்கொடை உறவின் அர்ப்பணத்தை
எமக்காய் தம்முயீர்ந்த தன்முனைப்பை
ஏற்றல் செய்யும் கார்த்திகையே
ஒற்றைத் திங்களில் ஓங்குபுகழ்
வீரத்தின் விடுதலை தாங்கும் எழில்
மறவாது போற்றும் மதிப்பே வரம்
அணையாத் தீபத்தின் அகிலப்பலம்
மறவாது வாழ்வோம் மாற்றம்நிஜம்நன்றி.

Author: