ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

ஒற்றை ஒளிவிளக்கில்….

வசந்தா ஜெகதீசன்
ஒற்றை ஒளிவிளக்கில்…
கிழக்கில் கதிரவன் விடியல் வரம்
கிடைக்கும் தருணங்கள் ஆற்றல் தரும்
சுழலும் உலகே எமக்கு வரம்
இரவும் பகலும் தருமே பலம்
கார்த்திகைத் திங்கள் ஒளிக்கோலம்
காசினி எங்கும் நினைவு நிஜம்
மதிப்புறு வீரத்தின் விழிதிறப்பு
வாஞ்சையில் வாழ்ந்தோர் வரவேற்பு
காந்தள் மலரால் கெளரவிப்பு
உயிர்க்கொடை உறவின் அர்ப்பணத்தை
எமக்காய் தம்முயீர்ந்த தன்முனைப்பை
ஏற்றல் செய்யும் கார்த்திகையே
ஒற்றைத் திங்களில் ஓங்குபுகழ்
வீரத்தின் விடுதலை தாங்கும் எழில்
மறவாது போற்றும் மதிப்பே வரம்
அணையாத் தீபத்தின் அகிலப்பலம்
மறவாது வாழ்வோம் மாற்றம்நிஜம்நன்றி.

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading