“பேரிடர்”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214

“பேரிடர்”
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!

ஊர்மனைகளுக்குள்
இயந்திர படகுகள்
மக்களை மீட்ட காட்சி
இது என்ன கொடுமை
இது என்ன வறுமை!

காற்றுக்கு
என்ன வேலி
மண்சரிவுக்கு ஏது வாசல்
நீரை தடுக்க
ஏது செய்வம்
விரிந்தினர் போல் வந்து
போகட்டும்!

மண்சரிவு
தொடரும் இடத்தில்
மக்களை குடியமர்த்துவது சரியா?
மலையக தமிழர்
வாழும் நிலப்பரப்பில் ஆண்டாண்டு அழிவின் அவலம்!

மக்கள் தண்ணீர்
வெள்ளத்தில் சிதைந்ததும்
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிய காட்சி
சதியா விதியா
சடங்கு செய்யவும் யாரும் இல்லை!

ஆகாயம் கூறும் வாய்மை
யோசிக்கும்
கூர்மை!
நன்றி
வணக்கம் 🙏

Author:

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading