சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நகைப்பானதோ மனிதநேயம் 79

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025

வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து குவிப்பு
உயிருக்கு போராடி ஒருவன் துடிக்க
உடனே படமெடுத்து கொமென்ட்டுக்கு காத்திருப்பு

வீதி ஓரத்தில் பிச்சைக்காரன்
வேகமாய் காணாதது போல் நடப்பான்
“சோம்பேறி!” என தீர்ப்பும் கொடுப்பான்
சொத்து நிறைய தனக்கே சேமிப்பான்.

இணையத்தில் பொழுதை போக்கி
இல்லத்தில் தனிமையில் உழல விட்டு
சாதி சமத்துவம் மேடையில் பேசி
சமயத்தில் சுயநல கண்ணாடி சூடி

நகைப்பானதோ மனிதநேயம்?.
நமக்கென்ன என விட்டிருப்பதா
நல்லவற்றைத் தட்டிக்கேட்பதா
எமக்குள்ளே மாற்றம் கொண்டு நாம்
ஏற்றம் காண்போமே..

Author: