கவி இலக்கம் : 32

கவி இலக்கம் : 32 விண்ணவன் – குமுழமுனை

ஆண்களின் வலி.
*~***~*
ஆண்கள் எப்பொழுது
வலியை மறைக்க
சிரிக்கதொடங்கினார்களோ!

அப்பொழுதே
இவ்வுலகும்,
சமுதாயமும்,

ஆண்களுக்கு
எப்பொழுதும்
வலிக்காது,

என்று முடிவு
செய்து விட்டது,
ஆனால் ஆண்களுக்கு
மட்டுமே தெரியும்,

அந்த சிரிப்புகளிற்கு
பின் எத்தனை
வலிகள் உள்ளதென,

இதை அறியாத
இவ்வுலகமோ!
ஆண்களை எவ்வளவு
முடியுமோ அவ்வளவு
வேதனைப்படுத்துகிறது,

ஆனால் அதற்கு
ஆண்களாகிய
நாங்களோ!

பேசுபவர் மனம்
நோகக்கூடாதென
எப்பொழுதும் போல,

வலிகளை
தாங்கிக்கொண்டு
சிரித்துவிட்டு
செல்கிறோம்.
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading