பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

கவி இலக்கம் : 32

கவி இலக்கம் : 32 விண்ணவன் – குமுழமுனை

ஆண்களின் வலி.
*~***~*
ஆண்கள் எப்பொழுது
வலியை மறைக்க
சிரிக்கதொடங்கினார்களோ!

அப்பொழுதே
இவ்வுலகும்,
சமுதாயமும்,

ஆண்களுக்கு
எப்பொழுதும்
வலிக்காது,

என்று முடிவு
செய்து விட்டது,
ஆனால் ஆண்களுக்கு
மட்டுமே தெரியும்,

அந்த சிரிப்புகளிற்கு
பின் எத்தனை
வலிகள் உள்ளதென,

இதை அறியாத
இவ்வுலகமோ!
ஆண்களை எவ்வளவு
முடியுமோ அவ்வளவு
வேதனைப்படுத்துகிறது,

ஆனால் அதற்கு
ஆண்களாகிய
நாங்களோ!

பேசுபவர் மனம்
நோகக்கூடாதென
எப்பொழுதும் போல,

வலிகளை
தாங்கிக்கொண்டு
சிரித்துவிட்டு
செல்கிறோம்.
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading