” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

” உழவும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A) ” உழவும் தமிழும் ” 22.01.2026

தமிழர்களின் பண்பாடு உழவு
தமிழர்களின் உயிர்மொழிதமிழ்
தமிழும் உழவும் உயிரின் இருகண்கள்
முன்தோன்றிய மூத்தமொழி தமிழ்
மண்பிளந்து பொன் விளைவிப்பது உழவு !

ஆதித்தமிழனின் நாவில் மலர்ந்தது அமுதத்தமிழ்
அவன் ஆர்வக் கைகளால்
அழகாய்ப் பிறந்தது உழவுத்தொழில்
தமிழுக்கு அடிப்படையாம் இலக்கணம்
உழவிற்கு அடித்தளமாம் நிலம்
உழவு நம்பண்பாடு அதுதருமே சாப்பாடு
தமிழர் பண்பாடு தமிழ் அதுதருமே அமுதத்தமிழ் !

உழவர் உழைப்பில்தான் உலகத்தவர் பிழைப்பு
உழவன் இல்லாத உலகம் இருளும்
உயிர்த்தமிழ் இல்லாது உணர்வும் இறக்கும்
உணர்வுபெற்றோம் நாம் தமிழாலே
உயிர்பெற்றோம் நாம் உழவாலே !