Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.05.2024
கவி இலக்கம்-265
“குருதிப்புனல்”
—————-
கொத்து கொத்து குண்டுகளால்
முள்ளி வாய்க்காலில் இடம் பெற்ற கோரச் சம்பவம்
எமது மொத்த உறவுகள்
சிந்திய குருதிப்புனல்
குருதி ஆறாய் ஓட மண்ணே சிவந்து நனைத்தது
எத்தனை பேரை இழந்தோம்
தாயின் மடியில் பால் குடித்த தாய் பிரிந்தாள்
குழந்தைகள் பலர் பெண்கள் உட்பட அழிந்தார்கள்
இத்தனை துயரச் செயல்கள் நாமும் அறிந்தோம் கேட்டோம்
நீதி தேவன் இங்கு நீதியற்ற போனதால்
அநீதிகளின் பிடிகளுக்கு அகப்பட்டு
கவனிப்பார் எவருமின்றி
எம் மக்கள் அழிந்து போயினர்
கோரச் சுமைகளை எல்லாம் கொன்று குவித்தனர் எம் மண்ணில்
கனக்குது இதயம் நிறையுது கண்ணீர்

ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading