பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.05.2024
கவி இலக்கம்-265
“குருதிப்புனல்”
—————-
கொத்து கொத்து குண்டுகளால்
முள்ளி வாய்க்காலில் இடம் பெற்ற கோரச் சம்பவம்
எமது மொத்த உறவுகள்
சிந்திய குருதிப்புனல்
குருதி ஆறாய் ஓட மண்ணே சிவந்து நனைத்தது
எத்தனை பேரை இழந்தோம்
தாயின் மடியில் பால் குடித்த தாய் பிரிந்தாள்
குழந்தைகள் பலர் பெண்கள் உட்பட அழிந்தார்கள்
இத்தனை துயரச் செயல்கள் நாமும் அறிந்தோம் கேட்டோம்
நீதி தேவன் இங்கு நீதியற்ற போனதால்
அநீதிகளின் பிடிகளுக்கு அகப்பட்டு
கவனிப்பார் எவருமின்றி
எம் மக்கள் அழிந்து போயினர்
கோரச் சுமைகளை எல்லாம் கொன்று குவித்தனர் எம் மண்ணில்
கனக்குது இதயம் நிறையுது கண்ணீர்

ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading