Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.05.2024
கவி இலக்கம்-265
“குருதிப்புனல்”
—————-
கொத்து கொத்து குண்டுகளால்
முள்ளி வாய்க்காலில் இடம் பெற்ற கோரச் சம்பவம்
எமது மொத்த உறவுகள்
சிந்திய குருதிப்புனல்
குருதி ஆறாய் ஓட மண்ணே சிவந்து நனைத்தது
எத்தனை பேரை இழந்தோம்
தாயின் மடியில் பால் குடித்த தாய் பிரிந்தாள்
குழந்தைகள் பலர் பெண்கள் உட்பட அழிந்தார்கள்
இத்தனை துயரச் செயல்கள் நாமும் அறிந்தோம் கேட்டோம்
நீதி தேவன் இங்கு நீதியற்ற போனதால்
அநீதிகளின் பிடிகளுக்கு அகப்பட்டு
கவனிப்பார் எவருமின்றி
எம் மக்கள் அழிந்து போயினர்
கோரச் சுமைகளை எல்லாம் கொன்று குவித்தனர் எம் மண்ணில்
கனக்குது இதயம் நிறையுது கண்ணீர்

ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading