Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.02.2025
கவி இலக்கம்-296
„ நம்பிக்கை”
——
வாழ்க்கை பலம் நம்பிக்கை
யானை பலம் தும்பிக்கை
நம் செயல்கள் நம்பிக்கயாய் விதை
நல்ல பலன் நமக்கு கிடைக்கும் நினை
நோய் வந்தால் முடங்காதே
தீர்ந்து விடும் என காத்திரு
ஏழ்மை கண்டு தளராதே
உழைத்து வாழ்வேன் என கொள்
கல்வி கோட்டை விடாது
முயற்சியில் வெற்றி பெறு
பணம் கையில் இல்லை
உழைத்து உயரப் பார்
நல்லதை நினைத்து வாழ்
நலமுடன் கிடைக்க நம்பிக்கை வை
இல்லாதவர்க்கு பகர்ந்து கொடு
கடவுள் உன்னில் நம்பிக்கை கொள்வார்
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading