மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-10.02.2022
கவி இலக்கம்-1457
செல் வந்தது
———————–
செல் வந்தது
செல்லமாக வந்தது
தூக்கி அணைத்து வைத்திருப்போர் பலர்
அருகினில் படுத்த படுக்கையில் தன்னோடு
உறங்க வைப்போர் சிலர்
செல் என்பதை வைலோஜி ஆசிரியை
உயிரணுவாம் என்று அழைப்பாரே
செல் என்பதை பிசிக்ஜ் ஆசிரியை
பற்றறி என நல்ல பெயர் வைத்தாரே
மற்ஸ் ஆசிரியர் பிள்ளைகளுக்கு
செல் விற்பனை பொருளாகி விட்டதே
செல் என்பதை சரித்திர ஆசிரியர் சொன்னாரே
ஜெயில் என்று கூறி துக்கமடைந்தாரே
தமிழ்மொழி ஆசிரியை செல்
அதாவது கிட்ட நிற்காதே போவென்று கூறினாரே
இப்படியாக செல் வந்தோ
செல்லும் இடமெலாம் செய்தி சொல்லும் செல் போனை
நாம் சொல்வதையே
செல்லாது தடுத்து
சிலையாக நம்மை
சிறை பிடிக்க வைக்குமே
செல்வது போல நமக்கு
செல் -வதை ஆகுது-நம்
உடல் செல்களும் சிதைவாகுது
அலைக்களிக்கும் அலைபேசியை
அளவோடு அணைப்போம்
அறம் மீறி அளவு மீறவே
அறவே அணைப்போம்
வாழ்க்கையே கையடக்க பேசியாக இராது
தேவைக்கேற்றதாக பயனாக்குவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading