K.Kumaran

வியாழன் கவி
ஆக்கம் 79

பூக்கட்டும் புன்னகை

மஞ்சன சொகுசும்
துஞ்சும் நாட்களும்
பல நாட்களானால்
வெண் தழல்
சூடும்
பின் புற
புண்களும்
கழிப்புகள்
தாங்கும் அங்கிகளும்
முகம் சுளிக்கும்
நூகர்ச்சி தரும்
போது !
வெள்ளை அங்கிப்புறா
ஒன்று
பிறந்த சிசு போல
சுத்தம் செய்து
மருந்துகள் இட்டால்
நன்றியுடன் புன்னகைக்கும்
அந்த வதனத்தை
பார்க்கையில்
பூக்கட்டும் புன்னகைகள்

க.குமரன்
யேர்மனு

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading