Selvi Nithianandan

ஈரம்
விண்ணிலே கனமாய் போகவே
மண்ணிலே மழையாய் வடியவே
எண்ணிலா உயிறும் சிதறியே
கண்ணிலே கசிந்ததே ஈரமாய்

வீடுகள் சுவருடன் கசிவாய்
வயல்கள்முற்றாய் சேதமாய்
வலிமை இழந்த நிலையாய்
வந்ததே பேரிடர் இழப்பாய்

ஈரத்திலே தவளையின் வாழ்வு
ஈன்றவரும் சோகத்திலே சாவு
ஈனம் துறந்து ஈகையேந்தி
ஈடேற்றம் காண வழிகாட்டுவாயா

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading