Selvi Nithianandan

அதனிலும் அரிது (509)
உலக நலவாழ்வு மையமே
உலகுக்கு உன்னதமாய்
அறிவித்த நாளுமாய் வந்ததே
உலக சுகாதார நாளாகும்

உயிர்களின் பாதுகாப்பிற்காய்
ஒன்றுபட்டு உழைத்திடல்
சுற்றுச்சூழல் சுகாதாரத்தை
சுத்தமாகக் கடைப்பிடித்தல் நன்று

தாய்சேய் நலன் கருதியும்
தரணியில் பிள்ளைகளின்
எதிர்காலம் ஒளிமயமான
விடிவிற்காய் அமைத்திடல் சிறப்பு

மானிடப்பிறப்பு அரிது
அதனிலும் அரிது
ஒளவையின் வாக்கே
நோயற்று வாழ்வதே
குருதியை உறுதிப்படுத்துமே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading