Selvi Nithianandan

மரநாளாய் 18.08.2022 9 527)
இயற்கையின் கொடையில்
இதுவும் ஒன்று
இலவச காற்றாய்
கிடைப்பதும் நன்று

மரங்களை நாட்டி
மண்ணை பேணல் சிறப்பு
இயற்கையாய் செயற்கையாய்
சுற்றுச்சூழலுக்கு வளமாய்
இருப்பதும் தனிச்சிறப்பாகும்

ஐரோப்பாவில் ஆரம்பித்து
அனைத்து கண்டங்களில் தருவாகி
ஆண்டுதோறும் கொண்டாட்டமாய்
ஆர்வத்தை உண்டாக்கும் நாளாகும்

காலநிலை மாற்றத்தாலும்
காடுகள் அழிப்பதாலும்
காசினியில் மழையும் குறைவாய்
காத்திரமாய் மரங்களை நாட்டி
காப்பாற்றவே மரநாளாம்

ஐக்கியநாடால் அங்கீகாரம்
ஐக்கியமாய் பலநாடும்
மரநாளாய் பின்பற்றி
மகத்துவமாய் வரவேற்குதே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading